Sunday, December 1, 2013

              குர்ஆனோடு விளையாடும்  நவீன வழிகேடர்கள் 



          குர்ஆனை தூய்மையின்றி தொடலாமா ?  




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹூ பரக்கத்துஹூ 



சமூதாய சிந்தனைக்கு ......



அல்லாஹூ தஃஆலா வழங்கிய வேதங்களில் இறுதி வேதம் புனிதம் நிறைந்த அல்குர்ஆன் . இந்த புனித குர்ஆனின்  கண்ணியத்தை முஸ்லீம்களின் உள்ளத்தில் இருந்து அகற்றவேண்டும் என்று உலக அளவில் சூழ்ச்சி நடை பெறுகிறது .என்பதை  இஸ்லாமியர்கள் அனைவரும் அறிந்த விசையம் !  

  • இஸ்லாத்தை சிரழித்திட வழிகேடற்கள் போடும் சதி திட்டம் .சிலவற்றை குறிப்பிடுகிறோம் 

  1. இஸ்லாத்திற்கு எதிரான அமைப்பு ரீதியிலான பிரச்சாரம் .
  2. இஸ்லாத்தைப் பற்றிய ஆய்வு செய்வதாக சொல்லி சந்தேகங்களைத் தோற்றுவிக்கும் நூல்களையும் , எவரும் எளிதில் அறியா வண்ணம் தவறான கருத்துக்களை இடைச் சொற்கலாக புகுத்தி இஸ்லாமிய கருத்துக்களைத் தாங்கிய நூல்களையும் வெளியிடுவது .
  3. இஸ்லாமிய கொள்கை , கோட்பாடுகளை சிதைத்து குர்ஆன் மஜீதின் அடிப்படைக் கொள்கைக்கு முரணாக இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் பணி, அதற்கென தனி பாணி .
  4. இஸ்லாத்தில் குழப்பங்களை விளைவிப்பவர்களுக்கு பொருளாதார உதவி செய்தல் .
  5. இஸ்லாத்திற்க்கு புறம்பான கொள்கைகளைத் தாங்கிய வழிகேடர்களை உருவாக்கி அவர்களை இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களிடையே நடமாடவிடுதல் .
  6. கல்விப் பணி , சமூக பணி , அறப்பணி ,என பல முறைகளில் முஸ்லிம்களை ஈர்த்து வழிகெடுக்க முனைதல் .
இப்படி பலப்பல ஆக்கரீதியான செயல்திட்டங்களுடன் இஸ்லாத்தை சிர்ழித்திட முற்படுள்ளார்கள் .

பிஜெ மதம் ஒரு பேராபத்து 



பிஜெ என்ற அதி மேதாவி  தான் சொல்வது மட்டும் தான் மார்க்கம் மற்ற யார் சொன்னாலும் அது மார்க்கம் அல்ல என்று . சொல்வது அனைவருக்கும் தெரிந்த விசையம் , அதை உருதி செய்வதர்க்கு ஒரு உதாரணம் பார்போம் ...         
  • யார் ? வேண்டுமானாலும் சுத்தம் இல்லாமல் அதாவது
  1.  ஒளூ இல்லாதவர்களும் ,
  2.  குளிப்பு கடமையானவர்களும் , 
  3. மாதவிடாய் பெண்களும் ,
  4. பேருகாலத்தொடக்கு உள்ள பெண்களும் ,
  5. எல்லா நிலைகளிலும் , எல்லா மனிதர்களும் ,
  6. குர்ஆனை தொடலாம் , என்று தன் சுய அறிவின் படி கருத்தை சொல்கிறார் : 

ஒளூ வின்றி குர்ஆனைத் தொடலாமா ?   என்பதை பற்றிய குர்ஆன் & ஹதீஸ்களை வைத்து ஆறாயிவோம் .


ஒளூ  இல்லாதவர்களும் , குளிப்பு கடமையானவர்களும் ,பெண்கள் மாதவிடாய் மற்றும் பேறு காலத்தொடக்கு உள்ளவர்களும் , குர்ஆனை தொடலாம் ?  ஓதலாம் ? என்று இஸ்லாமிய பெயர்தாங்கியான பிஜெ என்ற வழிகேடர் கூறுகிறார் . இதுவும் ஷரீஅத்தீன் தீர்ப்புக்கு முற்றிலும் மாறுபட்டதும் , ஹராமான செயலுமாகும் . 


ஸூரத்துல் வாகிஆவிலுள்79 ஆவது வசனத்திற்கு  அடைப்புக்குறிக்குள் ஒரு வார்த்தையைச் சேர்த்து  தவறான அர்த்தம் எழுதி , அதனுடைய விளக்க குறிப்பு 291 ல் பின் வருமாறு எழுதுகிறார் .






பிஜெ வின் விளக்கம் 

திருக்குர்ஆன் எழுத்துவடிவில் அருளப்படவில்லை எனும் போது எழுத்து  வடிவில் அருளப்படாததை தொடும் பேச்சுக்கே இடமில்லை . தொடும் வித்த்தில அருளப்படிருந்தால் மட்டுமே இந்தக் குர்ஆனைத் தொடமாட்டார்கள் என்று கூறமுடியும் . திருக்குர்ஆன் நபிகள் நாயகத்திற்கு ஓதிக் காட்டப்பட்டதே தவிர எழுத்து வடிவில் அருளப்படவில்லை .எனவே . இதைத் தொடமாட்டார்கள் என்பது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனைக் குறிக்காது . எங்கிருந்து அருளப்பட்டதோ அந்த மூலப்பிரதியைத்தான் குறிக்கும் . 

இவ்வாறு தன்னுடைய சுய விளக்கத்தை எழுதியபின் கடைசி பாராவில்  இப்படி எழுதி இருக்கிறார் :

எல்லா நிலைகளிலும் , எல்லா மனிதர்களும் குர்ஆனை தொடலாம் , படிக்கலாம் , வாசிக்கலாம் , என்பது  தான் குர்ஆனிலிருந்து பெறப்படுகிற ,நபிகள் நாயகத்தின் வழிமுறைகளிலிருந்து பெறப்படுகிற முடிவாகும் . 

  நூல் : பிஜெ வின் தர்ஜமா என்ற நாவல்                         பக்கம் : 1248       

    
 நம்முடைய விளக்கம் 


இதிலும் தன் சொந்தக் கருத்தைத்தான் சொல்கிறார் , ஆதாரம் எதையும் காண்பிக்கவில்லை . குர்ஆனிலிருந்து ,நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளிலுருந்தும்  பெறப்படுகின்ற முடிவு என்று பிஜெ கூறியிருப்பதும் தன்னிச்சையான முடிவேயாகும் .

இவ்வாறு தன் சுய அறிவுப்படி குர்ஆனுக்கு விளக்கம்  சொல்ப்வரைப் பற்றி ஹதீஸ்கள் எச்சரிகிறது 

ஹதீஸ் : 

                  தன் சுய அறிவின்படி குர்ஆனுக்கு விளக்கம் கூறுகிறவர் தன் தங்குமிடத்தை நரகத்தில்  ஆக்கிக் கொள்ளட்டும் என்று   நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் 


அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ       நூல் : திர்மிதி  ,மிஷ்காத் ,,

ஹதீஸ் = 2 

 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : யார் வேண்டும் என்றே என்மீது பொய் சொல்கிறாறோ அவர் தன் தங்குமிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும் . 

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ  நூல் திர்மிதி  ,மிஷ்காத் ,,
                            
    
பிஜெ இது போன்ற ஹதீஸ்களை பார்பது இல்லை போல் ! குர்ஆன் & ஹதீஸ் இவைகளில் இருந்து ஆதாரம் இல்லையே ? மாறாக பெறப்படும் கருத்து   என்று சொல்கிறார் .    பிஜெ என்ற கருத்து கண்ணாயிரம் 

குர்ஆனும் & ஹதீஸூம்   அல்லாத வேறு எந்த மனித அபிப்பிராயத்தையும் ஏற்கவே முடியாது என்று முழங்கிக் கொண்டுருப்பவர் . பிஜெ  என்ற கருத்து கண்ணாயிரம்  தன்னுடைய அபிப்பிராயத்தை மட்டும் இங்கு புகுத்தி  '' இதுதான் சரியான கருத்து '' என்று எவ்வாறு எழுதுகிறார்  ? 

எந்த ஆயத்திலும் & எந்த  ஹதீஸிலும் இல்லாத , ஒரு விளக்கத்தை  ,தன் அறிவை மட்டும் பயன் படுத்திக் கூறியிருப்பது . இவர் மிக பெரிய பொய்யன் , , வழிகேடன் என்பதற்க்கு  சான்றாகும் .  ..

இந்த பிஜெ  என்ற கருத்து கண்ணாயிரம் : தன்னுடைய கருத்து மட்டுமே சரியானது , மற்றவை தவறானவை என்ற விதத்திலேயே குர்ஆனுடைய  இந்த ஆயத்திற்கு  அர்த்தம் எழுதியுள்ளார் ,

பிஜெ வின் விளக்கத்தை பாருங்கள் : 

'' தூய்மையான ( வான ) வர்களைத் தவிர ( மற்றவர்கள் ) அதைத் தீண்டமாட்டார்கள் ''                                      (  மொழிபெயர்ப்பு = 56  /  79  )

மற்ற மொழிபெயர்ப்புகளில் உள்ள அர்த்தம் :

'' பரிசுத்தமானவர்களைத் தவிர ( வேறு எவரும் ) இதனைத் தொடமாட்டார்கள் ''         


பிஜெ தன்னுடைய மொழிபெயர்ப்பில் தூய்மையானவர்கள்  வானவர்கள்தாம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக  ''  வான  ''  என்ற ஒரு வார்த்தையை அடைப்புக்குறிக்குள் அதிகப்படுத்தி எழுதியுள்ளார் . இது எந்த மொழிப்பெயர்ப்பாளரும் எழுதாத புதிய கருத்தாகும் 

மேலும்  ,பிஜெ  என்ற கருத்து கண்ணாயிரம்  ''  லாயமஸ்ஸூஹூ  ''  என்பதற்க்கு  தீண்டமாட்டார்கள் என்று தவறாக அர்த்தம் எழுதியுள்ளார் . '' லாயமஸ்ஸூஹூ  ''  என்பதற்கு  தொடமாட்டார்கள்  என்பது அர்த்தம் . தொடமாட்டார்கள் என்பதற்கும் , தீண்டமாட்டார்கள் என்பதற்க்கும் நிறைய வேறுபாடு உள்ளது .பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் கடிப்பதற்குத்தான் தீண்டுதல் என்று சொல்லப்படும் . அவருடைய மொழிபெயர்ப்பில் இது போன்ற தாறு மாறான மொழிபெயர்ப்பைக்  கொண்டு விளக்கங்கள் கூறி குழப்பங்கள் செய்து வரும் இந்த வழிகேடர் பிஜெ  என்ற கருத்து கண்ணாயிரம் அடையாளம் கண்டுகொள்ளுங்கள் 

இது ஒரு சில வசனங்களுக்கு , மட்டும் மல்ல குர்ஆன் முழுமைக்கும் இவ்வாறே தவறான கருத்துக்கள் எழுதப்படுள்ளன ! இஸ்லாமியர்களே நம் ஈமானை பாதுகாக்க இது போன்ற வழிகேடர்கள் சொல்லும் & எழுதும் விளக்கம் வேண்டாம் .அல்லாஹூ நம்மை அனைவரையும் பாதுகாப்பானாக .

இனி நம் தஃப்ஸீர்களில் உள்ள விளக்கங்களைப் பார்ப்போம் :



பரிசுத்தமானவர்கள் என்று அல்லாஹூ தஃஆலா  கூறியுள்ள இந்த வார்த்தைக்கு இரண்டு அர்த்தம் கூறப்படும் .

  1. பாவங்களை விட்டுப் பரிசுத்தமானவர்கள் 
  2. அசுத்தாங்களை விட்டுப் பரிசுத்தமானவர்கள் 
  1. முதல்  அர்த்தத்தின் படி பரிசுத்தமானவர்கள் என்பவர்கள் மலக்குகளாகும் .அதன் படி தொடமாட்டார்கள் என்றால் '' லவ்ஹூல் மஹ்ஃபூள் என்னும் பதுகாக்கப்பட்ட பேரேட்டில் உள்ள்தை அவர்களைத் தவிர வேறெவரும் தொடமாட்டார்கள் என்பது கருத்தாகும் .
  2. இரண்டாவது அர்த்தத்தின் படி பரிசுத்தமானவர்கள் என்பவர்கள் மனிதர்களாகும் . ஒளு இல்லாமலிருப்பது , குளிப்பு கடமையாயிருப்பது , பெண்கள் மாதவிடாய் மற்றும்  பேறு காலத்தொடக்கு உள்ளவர்களாக இருப்பது போன்று  அசுத்தங்களை விட்டும்  பரிசுத்தமாயிருப்பது என்று  பொருளாகும் . இதன் படி தொடமாட்டார்கள் என்பது  நம் மிடமுள்ள அச்சிடப்பட்ட தாள்களைக் கொண்டகுர்ஆன் ஷரீஃபாகும் .  '''  குர்ஆனை (மேற்கூறப்பட்ட சிறிய பெரிய அசுத்தங்களை விட்டும் ) பரிசுத்ட்ட்ட்தமானவர்களான மனிதர்களைத் தவிர வேறு எவறும் தொடமாட்டார்கள்  ''' எனக் கருத்தாகும்
இவ்விரண்டு கருத்துகளுமே சரியானது தான் . ஒவ்வொரு கருத்தையும் ஸஹாபாக்களிலும் , தாபியீங்களிலும் , இமாம்களிலும் பலர் கூறியுள்ளனர் . 



  1. முதல் கருத்தை ஹஜரத் இப்னு அப்பாஸ் , அனஸ் , ஸயீது ஜூபைர் ( ரலியல்லாஹூ அன்ஹூம் ) அவர்களும் ,  முஜாஹித் , இக்ரிமா , ளஹ்ஹாக் , ஜாபிர் பின் ஜைத் ( ரஹிமஹூ முல்லாஹ் ) போன்றோர் கூறியுள்ளார்கள் .
  2. இரண்டாவது கருத்தை ஹஜரத் அலீ , இப்னு மஸூது , ஸஃது பின் அபீவக்காஸ் , ஸயீது பின் ஜைது  ( ரலியல்லாஹூ அன்ஹூம் ) அவர்களும் , முஹம்மது பாகர் , அதாஉ , தாவூஸ்  , ஜுஹ்ரி , ஸாலிம் , நகயீ , ஹகம் , ஹம்மாது , மாலிக் பின் அனஸ் , அபூஹனிஃபா , ஷாஃபீ , அஹ்மது பின் ஹம்பல் , ( ரஹிமஹூல்லாஹூ ) போன்றோர்கள் க்றியுள்ளார்கள் . 
இரண்டு கருத்துகளுமே சரியானது தான் . என்றாலும் இரண்டில் தீர்ப்புக்குரியதும்,  அமல் படுத்தப்பட வேண்டியதும் , இரண்டாவது கருத்தைத்தான் என்பது இமாம்கள் அனைவரின் ஏகோபித்த அபிப்பிராயமாகும் .

 எனவே , பரிசுத்தமானவர்களைத் தவிர  ( வேறு எவறும் ) இதனைத் தொடமாட்டார்கள் . என்ற ஆயத்திற்கு ஒளூ  இல்லாதவர்கள் குர்ஆனைத் தொடுவதும் . குளிப்பு கடமையானவரும் , மாதவிடாய் மற்றும் பேறு காலத்தீட்டு உள்ள பெண்களும் , குர்ஆனைத் தொடுவதும் , ஓதுவதும் ஹராமாகும் .


இதற்கு நேர்மாற்றமாக பிஜெ  என்ற வழிகேடர் எல்லா நிலைகளிலும் , எல்லா மனிதர்களும் , க்ர்ஆனைத் தொடலாம் . படிக்கலாம் . வாசிக்கலாம் , என்று  பிஜெ எழுதியிருப்பது முற்றிலும் தவறாகும் . ஷரீஅத்தில் ஹராம் என்று தீர்ப்பாளிக்கப்பட்ட ஒரு செயலை ஹலாலாக்கிவைக்கிறார் . 

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் பரிசுத்தமான மனிதர்கள் மட்டுமே இந்தக் குர்ஆனைத் தொடவேண்டுமெனக் கூறிய ஹதீஸ்களை பார்போம் 

ஹதீஸ் : 1 

யமன் நாட்டுக்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் : எழுதிய ஒரு கடிதத்தில்  '' லா  யமஸ்ஸூல்  குர்ஆன  இல்லா  தாஹிருன்  ''  பொருள் : சுத்தமானவரைத் தவிர இந்தக் குர்ஆனைத் தொடவேண்டாம்  ''  என எழுதியனுப்பியதாக அம்ரு பின் ஹஜம் ( ரலியல்லாஹூ அன்ஹூ ) அவர்கள் அறிவித்துள்ளார்கள் .  இந்த ஹதீஸ் தாருகுதீனி , யில் பதிவு செய்யப்பட்டுள்ளது , இதனை ஹாகிம் அவர்கள் மஃரி ஃபாவிலும் , பைஹகீ அவர்கள்  கிலாஃபிய்யத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள் .


ஹதீஸ் : 2 

       '' பரிசுத்தமானவரைத் தவிர ( வேறு எவறும் ) இந்தக் குர்ஆனைத் தொடவேண்டாம் ''  ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் :கூறினார்கள்


அறிவித்தவர்  : இப்னு உமர் ரலயல்லாஹூ அன்ஹூ  நூல் : தப்ரானீ  
         

ஹதீஸ் : 3            

     ஹகீம் பின் ஹிஜாம்  ( ரலியல்லாஹூ அன்ஹூ ) அவர்களை யமன் நாட்டிற்கு  அனுப்பிய பொழுது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் : ''  நீ பரிசுத்தமாயிருக்கும் நிலையிலே தவிர இந்தக் குர்ஆனைத் தொடவேண்டாம் என்று கூறி அனுப்பினார்கள் .

நூல் : தப்ரானீ , அபிதாவுத் , ஹாகிம் ,  கஞ்ஜுல் உம்மால்  ( 1 / 615 ) 

 நூல் : ரூஹூல் மஃஆனீ ( 9 / 155  )  இப்னு கதீர்  (4 / 229 )  குர்துபீ (17 / 225 ) மள்ஹரீ ( 1 / 181 )  மஃஆரிஃபுல் குர்ஆன்  (8 /287 )  ஆகிய விரிவுரைகளிலும் , எடுத்தெழுதப் பட்டுள்ளன . இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்றும் இப்னு கதீரில் குறிப்பிடப்பட்டுள்ளது , 

ஹதீஸ் ; 4 

            சுத்தம் ( ஒளூ ) இல்லாதவர்கள் குர்ஆனை தொட வேண்டாம் , தொடக்கூடாது . என நிச்சியமாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் யமன் வாசிகளுக்கு கடிதம்  எழுதினார்கள் 

 ( அறிவித்தவர் : அபூபக்ரு பின் முஹம்மது பின் ஹஜ்ம் ரலியல்லாஹூ அன்ஹூ      நூல்  : தப்ரானி )



ஹதீஸ் : 5 

        தூய்மை மூலம் தவிர எந்த தொழுகையும் ஏற்க்கப்படாது என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் 

அறிவித்தவர் : அபு குரைரா ரலியல்லாஹூ அன்ஹூ   நூல் : முஸ்லிம் , அபூதாவுத்     

 இதில் தூய்மை என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள் இதில் தூய்மை என்பது ஒளூ மற்றும் குளிப்பு , இரண்டையும் குறிக்கும் . அதே போல் தான் தூய்மை இன்றி குர்ஆனை தொடாதே என்பதற்க்கு ஒளூ மற்றும் குளிப்பு இரன்டையும் குறிக்கும் .

ஹதீஸ் : 6 

       மாதவிடாய் ஏற்பட்டவர்களும் , குளிப்பு கடமையானவர்களும் , குர்ஆனை எதனையும் . ஓதலாகாது என நபிகள்  நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள் 

 ( அறிவித்தவர் : இப்னு உமர் ரலியல்லாஹூ அன்ஹூ நூல் : திர்மிதீ , அபுதாவுத் , ) 

ஹதீஸ் : 7 

  ஜனாபத் இல்லாத எல்லா நிலையிலும் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்  எங்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள் 

அறிவித்தவர் : அலி ரலியல்லாஹூ அன்ஹூ    நூல் :  திர்மிதீ 


மேற்கூறப்பட்ட ஹதீஸ்களில் குர்ஆனை  ஒளூ வின்றித் தொடுவதும் , குளிப்பு கடமையானவர் , மாதவிடாய் மற்றும் பேறு காலத்தீட்டு உள்ள பெண்  ஆகியோர்கள் தொடுவதும் , ஓதுவதும் ஹராம் என்பதைச் ஹதீஸ்கள் மூலம் ஆதாரம் காட்டிவுள்ளோம் இதைத்தான் சட்டமாமேதைகள் ஹராம் என்பதை விளக்கிவுள்ளார்கள் .

திருக்குர்ஆனை ஓளூ இல்லாமல் தொடலாம் என்பதற்க்கு இன்னோரு உதாரணத்தையும்  எழுதியுள்ளார் பிஜெ என்ற கருத்து கண்ணாயிரம் இதை படியுங்கள் : 

இந்தக் குரஆன்த் தூய்மையானவர்கள் தான் தொட்வேண்டும் , மற்றவர்கள் தொடக்கூடாது என்றெல்லாம் இவ்வசனத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு பலரும் சட்டங்களை வகுத்துள்ளனர் . ஆனால் இந்த வசனம் எல்லா மக்களுக்கும் , வழிகாட்டுவதற்காக அருளப்பட்டது . எல்லா நிலையிலும் வாசிப்பதற்காக அருளப்பட்டது . எல்லா மாந்தர்களும்  படிப்பதற்காக அருளப்பட்டது . 

முஸ்லிம்கள் அல்லாதாவர்கள் இந்தக் குர்ஆனை வாசித்தால் தான் அவர்கள்  நேர்வழி பெற முடியும் . நீங்கள் தூய்மையாக இல்லை , நீங்கள் குர்ஆனைத் தொடக் கூடாது , என்று கூறினால் எந்த நோக்கத்திற்க்காக குர்ஆனை அல்லாஹூ அருளினானோ அந்த நோக்கத்தைச் சிதைத்தவர்களாக நாம் ஆகிவிடுவோம் .

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் பல நாடுகளின் தலைவர்களுக்கு திருக்குர்ஆன் வசனங்களை எழுதி இஸ்லாத்தின் பால் அழைப்புக் கொடுத்துள்ளார்கள் .

அந்த மன்னர்கள் அதைத் தம் கையால் தொட்டு வாசிப்பார்கள் என்பதை அறிந்தே திருக்குர்ஆன் வசனங்களை எழுதி அனுப்பியிருக்கும் போது திர்க்குர்ஆனைத் தூய்மையுடன் தான் தொடவேண்டும் என்று கூறுவது தவறாகும் . குர்ஆனிலிருந்து மக்களை அந்நியப்பத்தி விடும் .

பிஜெ வின் தர்ஜமா என்ற நாவல்                                  பக்கம் : 1065  

நம்முடைய விளக்கம் 


இது , அவர் தன்னுடைய சுய அறிவின்படி எழுதியதாகும் இதற்காவது குர்ஆன் & ஹதீஸ்களில் இருந்து ஆதாரம் காட்டி இருக்க வேண்டும் அப்படியும் செய்யவில்லை . 

குர்ஆனில் நாம் சுயகருத்தை சொல்லலாமா ? 

ஹதீஸ்  :  1

     ''    எவரொருவர் தன் சுயறிவுப்படி குர்ஆனுக்கு விளக்கம் கூறி  ( உண்மையில் ) அது சரியாக இருந்தாலும் உறுதியாக அவர் தவறு செய்தவரேயாவார்  '' 

 அறிவிப்பவர் :ஜூந்துப் பின் அப்தில்லாஹ் ரலியல்லாஹூ அன்ஹூ  நூல்  திர்மிதி 

ஹதீஸ் : 2 

    ''    யார் குர்ஆனில் தர்கம் செய்கிறறோ  அவர் காஃபிராகி விட்டார்   ''

( அறிவிப்பவர் : அபூஹூறைறா ரலியல்லாஹூ அன்ஹூ   நூல் : அஹமது , அபூதாவூத் , )


அல்லாஹூ திருகுர்ஆனில் இணைவைத்து வணங்குபவர்களை பற்றி : ஈமான் கொண்டவர்களே ; நிச்சயமாக இணைவைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே             (    9  /    28  ) 

இந்த குர்ஆனை தூய்மையானவர்கள்தான் தொடவேண்டும் மென்பதற்க்கு மேலே பல ஆதாரமாக ஹதீஸ்களை காட்டி விட்டோம் ஆனால் பிஜெ குர்ஆனையோ & ஹதீஸையோ காட்டாமல் தன் சொந்த சரக்கை ( சுய அறிவை ) பயன்படுத்திவுள்ளார் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது . 

நாம்   பிஜெ  பானியிலே கேட்போம் அதாவது 
  1. அல்லாஹூவும் ,அவனுடைய  ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் சொல்படி  நடப்பது சிறந்ததா ? 
  2. தன்னுடைய சுயஅறிவை பயன்படுதும் இந்த பிஜெ என்ற கருத்து கண்ணாயிரத்தை பின்பற்றுவது சிறந்ததா ?
என்று உங்களிடத்தில் கேட்டால் நீங்கள் கண்களை முடிக்கொண்டே சொல்விற்கள் அல்லாஹூம் , ரஸூலும் , சொல்வதைதான் கேட்போம் என்று . 

பிஜெவின் கூற்று : 

முஸ்லிம்கள் அல்லாதவர்கள் இந்தக் குர்ஆனை வாசித்தால் தான் அவர்கள் நேர்வழி பெற முடியும் , நீங்கள் தூய்மையாக இல்லை . நீங்கள் குர்ஆனைத் தொடக் கூடாது ? ( அவர்கள் எப்படி நேர்வழி பெறுவார்கள் ) என்று விளங்காமல் எழுதியுள்ளார் . 


நம்முடைய விளக்கம் : 

     உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின்  வாழ்க்கை வரலாற்றில் மிகபெரிய ஒரு பாடத்தை  நமக்கு  அல்லாஹூ வைத்து  இருக்கிறது !!!


கப்பாப்  ( ரலி ) அவர்கள் உமரி  ( ரலி ) அவர்களின் சகோதரிக்கும் ,அவறது கணவருக்கும் தனது ஏட்டிலுள்ள தாஹா எனத் தொடங்கும் . அத்தியாயம் தாஹாவின் வசனங்கள் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் உமர்  ( ரலி ) அவர்கள் வருவதை அறிந்த கப்பாப்  ( ரலி ) அவர்கள்  வீட்டினுல் மறைந்து கொண்டார்கள் , உமரி ( ரலி ) அவர்களின் சகோதரியும் அந்த ஏட்டைமறைத்து விட்டார்கள் . எனினும் உமர்  ( ரலி ) அவர்கள் வீட்டிற்க்கு அருகே வந்துபோது கப்பாப்  ( ரலி ) அவர்கள் கற்றுக் கொடுத்த சப்ததை  கேட்டு விட்டார்கள் .

 வீட்டினுல் நூழைந்த உமர்  ( ரலி ) அவர்கள்  உங்களிடம் நான் செவிமடுத்த மெல்லிய சத்தம் என்ன ? என்று கேட்டதற்க்கு நாங்கள் பேசிக்கொண்டுருந்ததை தவுர வேறு எதுவும் இல்லை .என்று அவ்விருவரும் கூறினார்கள் . அப்போது உமர்  ( ரலி ) அவர்கள் நீங்கள் மதம் மாறிவிட்டிர்களா ? என்று கேட்டார்  அதற்க்கு  அவரது மச்சான் உமரே ! சத்தியம்  உன்னுடைய மார்க்கத்தை தவிர வேரொன்றில் இருந்தால் உங்கள் கருத்து என்ன ? என்று கேட்டார் . 

உமர்  ( ரலி ) அவர்கள் கடுஞ்சினம் கொண்டு தனது மச்சானின் மீது பாய்ந்து .அவரை பலமாகத்தாக்கி மிதிக்கவும் செய்தார் .அவரது சகோதரி தனது கணவரை விட்டு உமர்  ( ரலி ) அவர்கள் விலக்கினார்கள் . உமர்  ( ரலி ) அவர்கள்  தன் சகோதரியின் கன்னத்தில்  அறைந்தார்  அவரது முகத்தை ரத்தக் காயப்படுத்தினார் கோபம்  கொண்ட உமர்  ( ரலி ) அவர்களின் சகோதரி உமது மார்க்கமல்லாத  வேறோன்றில் உண்மை இருந்தாலுமா ? ( அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது ) 

 அல்லாஹூவை தவிர வணக்கத்துக் கூறியவன் இரைவன் வேறு யாரும் இல்லை முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹூ வின் தூதர்  என்று நான் சாட்ச்சி கூறுகிறேன் . என்று உரக்க கூறினார்கள் . தனது கோபம் பலனற்றுப் போனதை க் கண்ட உமர்  ( ரலி ) அவர்கள் நிராசை அடைந்தார்கள் . தனது சகோதரிக்கு ஏற்ப்பட்ட  ரத்தக் காயத்தைப் பார்த்து அவர்க்கு கைசேதமும் , வெக்கமும் , ஏற்பட்டது . 

உங்களிடம் உள்ள இந்த புத்தகத்தை கொடுங்கள் .நான் அதை படிக்க வேண்டும் . என்று கூறினார்கள் . அதற்க்கு அவரது சகோதரி  நீர் அசுத்தமானவர்  ,நீர் குளித்து விட்டு வாரும் . என்று கூறி அதை தர மறுத்து விட்டர்கள் . பிறகு குளித்து வந்தவுடன் அந்த திருமரையின் எழுதியா அந்த தாளை கொடுத்தார்கள் . பிஸ்மில்லா  ஹிர்ரஹ்மான் நிர்ரஹிம் .என்று ஓதியவுடன் .

என்ன தூய்மையான பெயர்கள் ! என்று கூறி தொடர்ந்து  தாஹா என்று தொடங்கி  பதினாங்காம் வசனம் வரை ஓதினார்கள் .இது எவ்வளவு அசலான , சொற்கள் . எவ்வளவு இனிமையான தாக இருக்கிறது . எனக்கு  முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் என்னை அழைத்து செல்லுங்கள் . என்று கேட்டார்கள் .

 உமர்  ( ரலி ) அவர்கள்  பேச்சை கேட்ட கப்பாப்  ( ரலி ) அவர்கள் வெளியே வந்தார்கள் .உமரே உங்கள் மீது நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள் !  வியாழன் இரவு அல்லாஹூவே ! உமர் அல்லது அபுஜஹ்ல் மூலமாக இஸ்லாத்திற்க்கு உயர்வை கொடு என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்  செய்த பிராத்தனை  உங்கள் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது  என்று உண்மையனறு நம்புகிறேன் என்று கப்பாப்  ( ரலி ) அவர்கள் கூறினார்கம் 

(   நூல் : முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு )

இந்த வரலாறு நமக்கு மிக பெரிய படிப்பினை காட்டுகிறது ! 
  •   குர்ஆன் முழுவதும் எழுதப்பட வில்லை 
  • குர்ஆன் சில வசனங்கள் தான் இருந்தது 
  •   அந்த எழுதிய தாளை  தொடுவதர்கே  சுத்தம் வேண்டும் என்றால் குர்ஆனை முழுவதும் தொடுவதற்க்கு சுத்தம் வேண்டாமா ? 
  • இந்த விளக்கமே போதும்  

பிஜெ என்ற வழிகேடனுடைய அறிவுக்கு  ஒத்து வரவில்லை என்று சொல்லி ஸஹாபாக்களுடைய  கருத்தை அலட்சியமாக விட்டு விட முடியுமா ? ? 

நாம் முஸ்லிமல்லாதவர்களுக்கு திருக்குர்ஆன் பிரதியைக் கொடுக்க வேண்டுமென்றால் , நீங்கள் சுத்தமாக இருந்து இதனைப் படிக்க வேண்டும் என்று சொல்லித்தான் கொடுத்திட வேண்டும்.  அவர்களாக அதனை வாங்கிச் சென்றால் அது  நம்மீது குற்றமாகது . நமக்குத் தெரிந்தால் சுத்தாமாக இருந்து அதனை வாசியுங்கள்  என்று அவசியம் சொல்லியாக வேண்டும் . 

அவ்வாறு அவர்கள் சுத்தம் செய்து கொள்வது வெளித்தோற்றமான சுத்தமே ! உமர்  ( ரலி ) அவர்கள்  சுத்தம் செய்து கொண்டது போல்.


பிஜெ வின் விளக்கம் :

         தலைவர்களுக்கெல்லாம் இஸ்லாமிய அழைப்பு அனுப்பியதைக் குறிப்பிள்ளார் அதாவது  '' அந்த மன்னர்கள் அதைத் தம் கையால் தொட்டு வாசிப்பார்கள் என்பதை அறிந்தே திருக்குர்ஆன் வசனங்களை எழுதி அனுப்பியிருக்கும் போது திர்க்குர்ஆனைத் தூய்மையுடன் தான் தொடவேண்டும் என்று கூறுவது தவறாகும் . குர்ஆனிலிருந்து மக்களை அந்நியப்பத்தி விடும் .

பிஜெ வின் தர்ஜமா என்ற நாவல்                                  பக்கம் : 1065  


நம்முடைய விளக்கம் :


 நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் 
மன்னர்களுக்கும் , தலைவர்களுக்கும் , இஸ்லாத்தின் பால் அழைப்புவிடுத்துக் கடிதம் எழுதியபோது  . ''  யா அஹ்லல் கிதாபி தஆலவ்  இலா கலிமத்தின் '' .....      என்று தொடங்கும்  வாசகத்தை எழுதியனுப்பியது  ,  அல்லாஹ்வுடைய கட்டளைக்கு  கட்டுப்பட்டு  அதனைத் தங்கள் புறத்திலிருந்து எழுதும் வாசகமா எழுதினார்களே தவிர அல்லாஹ்வுடைய கலாம் திருவசனம் என்ற முறையில் எழுதவில்லை .

அதனால் தான் அந்த வசனத்தின் ஆரம்பத்திலுள்ள  ''  குல்  ''  ( கூறுவீறாக )  என்ற வார்த்தையை எழுதாமல்  , '' யா  அஹ்லல் கிதாபி தஆலவ் இலா கலிமத்தின் ..'' என்று தொடங்கி  எழுதியுள்ளார்கள் . அல்லாஹூடைய கலாம் என்ற முறையில் அதனை எழுதியிருந்தால்  இப்படி எழுதியிருப்பார்கள்    ''   குல்  யா அஹ்லல் கிதாபி தஆலவ் இலா கலிமத்தின் ...''  குல் என்ற வார்த்தையை நீக்கியிருக்க மாட்டார்கள் . 

அவ்வாறு ( ஒரு எழுத்தைக்கூட ) எடுத்து விட்டு எழுதுவதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அனுமதியில்லை  .எனவே அழைப்புக் கடிதத்தில் எழுதிய வாசகத்தை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புறத்திலிருந்து எழுதியுள்ளார்கள் என்பதே முடிவு 

நூல் : தஃப்ஸீர் மளஹரீ ( 9 / 181 ) 

அசுத்தமானவர்கள் குர்ஆனை எடுத்து அவமரியாதை செய்து விடுவார்கள்  என்பதினால்தான் எதிரிகளிருக்கும் ஊர்களுக்கு அதனை எடுத்து செல்வதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தடைவிதித்தார்கள் 

ஹதீஸ் :  1 

       எதிரிகள் கைப்பற்றிவிடுவார்கள் என்று பயந்தால் எதிரிகலிருக்கும் பகுதிக்குக் குர்ஆனைக் கொண்டு செல்வதற்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தடைவிதித்தார்கள் 


(அறிவிப்பவர் : இப்னு உமர் ரலியல்லாஹூ அன்ஹூ   நூல் : முஸ்லிம் )


திருக்குர்ஆன் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எழுத்து வடிவில்  அருளப்படவில்லை என்பதால் , எழுத்து வடிவிலுள்ள இந்த குர்ஆனை சுத்தமில்லாதவர்களும் தொடலாம் , என்றொரு கருத்தையும் பிஜெ எழுதியுள்ளார் .

அல்லாஹூ தஆலா தன் வேதத்தைக் '' குர்ஆனுன் கரீம் ''  சங்கைக்குரிய குர்ஆன் என்று கூறுகிறான் . அதனை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித இதயத்தில் இறக்கிவைத்ததாகவும் , கூறியுள்ளான் . அப்புனித இதயத்திலிருந்துதான் ஏட்டினில் எழுதப்பட்டுள்ளது .

சங்கைகுரிய அந்த வேதம் எழுதப்பட்டுள்ள ஏட்டிற்க்கு  கண்ணியமளிக்க வில்லையானல் அது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின்  இதயத்தில் உள்ள குர்ஆனுக்கு கண்ணியமளிக்காததைப் போன்றாகும் . நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் இதயத்தில்  உள்ள அல்லாஹ்வின் திரு வேதத்திற்கு மதிப்பளிக்கவில்லையென்றால் .

அது பாதுகாக்கப்பட்ட அந்த புனித ஏட்டிலுள்ள குர்ஆனையே ! அவமரியாதை செய்ததாகவே  கருதப்படும் . எனவே ஒளூ இல்லாமல் இந்த குர்ஆனைத் தொடலாம் என்று கூறுவது , இது எங்கிருந்து அருளப்பட்டதோ அந்த அசல் ஏட்டையே சுத்தமில்லாமல் தொடலாம் என்று கூறுவதைப் போன்றதுதான் .

ஆகையால் , ஒளூ இல்லாமல் திருக்குர்ஆனைத் தொடுவதும் , குளிப்புக்கடமையானவரும் , மாதவிடாய் உள்ள பெண்ணும் , பேறு காலத் தொடக்குள்ள பெண்ணும் ,குர்ஆனைத் தொடுவதும் , ஓதுவதும் , ஹராம் என்பதே  அனைத்து ஸஹாபாக்கள் ,தாபியீங்கள் , தபவு தாபியீங்கள், இமாம்கள் , இறை நேசர்கள் , ஸூஃபியாக்கள் , ஏகோபித்த முடிவாகும் இந்த ஏகோபித்த் முடிவுக்கு எதிராக பிஜெ செல்வதும் அவருடைய மொழிபெயர்ப்பும் தள்ளுபடி செய்யப்பட வேண்டியதாகும் ..


ஏன் ? என்றால்  பிஜெ என்ற கருத்து கண்ணயிரம் அவரே  சொல்லிருக்கார் & எழுதியிருக்கார் தன்னுடைய தர்ஜமா என்ற நாவலில் பக்கம் = 1304 


ஒட்டு மொத்த சமூதாயமே சாட்சி கூறுவதும் , ஒருவரே சாட்சி கூறுவதும்  சமமானதாக ஆகாது  .  எவ்வளவுதான்  நம்பகமானவர்கள் என்றாலும் ஒருவர் & இருவர்  அறிவிக்கும்  செய்திகள் தவறுகள் நிகழ வாய்ப்புகள் உள்ளன் 

என்ற பிஜெவின் கூற்றுக்கு இனங்க ஒளூ இல்லாமல் குர்ஆனைத் தொடலாம் என்பது தவறு ஆகும் . 

   இவர் ஆதாரம் இல்லாமல் தன் சுய கருத்தை சொல்வதாலும் & ஹதீஸ்களை முழுமையாக படிக்கமால் . அறைகுறையுமாக படித்துவிட்டு உளருவதும் , ஹதீஸ்களை ஆராய்வதில் ஞானம் இல்லாமல் இருப்பதுதான் இதற்க்கு காரணம் இனி மேலாவது முறையாக படித்து விட்டு மார்கத்தை பற்றி பேசுங்கள் . அல்லாஹூ இது போன்ற இஸ்லாமிய பெயர்தாங்கிகளை விட்டும் நம் அணைவரையும் பாதுகாத்து , சுன்னத் ஜமாஅத் கொள்கையில் மரணிக்க செய்வானக ஆமீன் , ஆமீன் ஆமீன் ,,,

No comments:

Post a Comment