Thursday, September 24, 2015

தியாகத்தின் விளக்கு !
தியாகத்தின்  செம்மல் !
அல்லாஹ்வின் தோழர் !
நபி இப்ராஹிம் அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்.

இறைவனின் திருப் பொருத்தத்திற்க்காக வாழ்வது தான் சுகங்களில் பெரும் சுகம் .இதை தான் நபி இப்ராஹிம் அலைஹி வஸல்லம் அவர்கள் நிரூபித்து காட்டினார்கள் .

கால வெள்ளத்தால் கரைக்க முடியாத , தியாகத்தின் சின்னமாக இன்றும் வரலாற்றின் பொன்னேடுகளில் அவர் மின்னுகிறார் .

பல வருடங்கள் தவமாய் தவமிருந்து !
பெற்ற பிள்ளையை அறுத்து பலியிடு என இறைக்கட்டளை வந்தபோது மறுக்காமல் ! முன்வந்தவர் .

ஆனால் இத்தனை பெரிய தியாகங்களையெல்லாம் நாம்செய்ய முடியாவிட்டாலும் .

இறைவனின் திருப்பொருத்தத்திற்க்காக .தியாகப் பண்புகளையும்,நற்பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் .

இறைவனுக்காக இனிய வாழ்கையையும்,இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பிய எளிய வாழ்க்கையையும் ,வாழ்வதற்க்கு இந்த தியாகத் திருநாளில் சபதம் ஏற்ப்போம்.
அணைவருக்கும் தியாகப் பெருநாள் நல் வாழ்த்துக்கள் .
ஈத் முபாரக் ...

உலக மக்கள் அணைவருக்கும் தியாகப் பெருநாள் நல் வாழ்த்துகள் .....

No comments:

Post a Comment